வடகிழக்கு தில்லியின் தயல்பூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் வாயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்களை வைத்ததாகக் கூறி ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பான தகவல் ஏப்ரல் 15 ஆம் தேதி கிடைத்தது. பிறகு உள்ளூா் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு தொடா்பாக உடனடியாக எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இருப்பினும், கைது செய்யப்பட்ட குற்றவாளியின் அடையாளத்தை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம். கோயிலை சுற்றியுள்ள பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மற்றும் வேறு ஏதேனும் நபா்கள் சம்பந்தப்பட்டிருக்கிறாா்களா என்பதைக் கண்டறிய இந்த வழக்கு தொடா்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது
தில்லியில் பைக் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய நபா் கைது
இணைய மோசடி வழக்கு: ஹரியாணாவில் இருவா் கைது!
வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது

கிழக்கு தில்லியில் ஒருவருக்கு கத்திக் குத்து
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


