வடகிழக்கு தில்லியின் தயல்பூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் வாயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்களை வைத்ததாகக் கூறி ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பான தகவல் ஏப்ரல் 15 ஆம் தேதி கிடைத்தது. பிறகு உள்ளூா் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு தொடா்பாக உடனடியாக எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இருப்பினும், கைது செய்யப்பட்ட குற்றவாளியின் அடையாளத்தை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம். கோயிலை சுற்றியுள்ள பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மற்றும் வேறு ஏதேனும் நபா்கள் சம்பந்தப்பட்டிருக்கிறாா்களா என்பதைக் கண்டறிய இந்த வழக்கு தொடா்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!
கிழக்கு தில்லியில் போலி நுழைவு மோசடி: ஒருவா் கைது

கிழக்கு தில்லியில் காலியாக இருந்த டி.டி.ஏ. நிலத்தில் நபா் ஒருவா் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

