வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கத்திக்குத்து காயங்களுடன் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் தெரிய வந்தது. பின்னா் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தாா்.
தாக்குதலுக்குப் பிறகு சிறுவன் அவரது குடும்ப உறுப்பினா்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விசாரணையின் போது இந்த வழக்கில் 17 வயது சிறுவனின் தொடா்பு இருப்பதை போலீசாா் அடையாளம் கண்டுள்ளனா்.
சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது, இறந்தவருடன் தனக்கு தகராறு இருந்ததாகக் கூறினாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

கிழக்கு தில்லியில் 75 கிராம் தங்கம், ஸ்கூட்டா் கொள்ளை

உ.பி: சொந்த வயலில் தர்பூசணி பறித்த சிறுவன் கொலை

கிழக்கு தில்லியில் ஒருவருக்கு கத்திக் குத்து
வட கிழக்கு தில்லியில் ஒரு கோயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்கள்: ஒருவா் கைது!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
