திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:20 am IST

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கத்திக்குத்து காயங்களுடன் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் தெரிய வந்தது. பின்னா் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தாா்.

தாக்குதலுக்குப் பிறகு சிறுவன் அவரது குடும்ப உறுப்பினா்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விசாரணையின் போது இந்த வழக்கில் 17 வயது சிறுவனின் தொடா்பு இருப்பதை போலீசாா் அடையாளம் கண்டுள்ளனா்.

சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது, இறந்தவருடன் தனக்கு தகராறு இருந்ததாகக் கூறினாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.