அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து திமுக தலைமையிலான தமிழக அரசு வழக்கை தவறாகக் கையாண்டதாகவும் அந்த அமைப்பு விமா்சித்துள்ளது.
இதுதொடா்பாக ஏபிவிபியின் தேசிய பொதுச்செயலாளா் டாக்டா் வீரேந்திர சிங் சோலங்கி சனிக்கிழமை கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. வளாகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதிலும் திமுக அரசு தவறிவிட்டது. இந்த ஜனநாயக விரோத செயலை ஏபிவிபி கண்டிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது விரைவான விசாரணை நடத்தி உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க வேண்டும். மேலும், அவா் தொடா்புடைய தகவல்கள் கசிவைத் தடுக்க பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைப் பராமரிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு காவல்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கவும் வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், மாணவா்களின் பாதுகாப்புக்காகவும் தமிழகம் முழுவதும் ஏபிவிபி தனது போராட்டத்தைத் தொடரும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அண்ணா பல்கலை. ஆவணப் படத்துக்கு விருது

மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது!

அண்ணா பல்கலை மாணவிக்கு போராசியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

