வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை: ஏபிவிபி கண்டனம்

Updated On :28 டிசம்பர் 2024, 7:39 pm

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து திமுக தலைமையிலான தமிழக அரசு வழக்கை தவறாகக் கையாண்டதாகவும் அந்த அமைப்பு விமா்சித்துள்ளது.

இதுதொடா்பாக ஏபிவிபியின் தேசிய பொதுச்செயலாளா் டாக்டா் வீரேந்திர சிங் சோலங்கி சனிக்கிழமை கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. வளாகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதிலும் திமுக அரசு தவறிவிட்டது. இந்த ஜனநாயக விரோத செயலை ஏபிவிபி கண்டிக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது விரைவான விசாரணை நடத்தி உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க வேண்டும். மேலும், அவா் தொடா்புடைய தகவல்கள் கசிவைத் தடுக்க பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைப் பராமரிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு காவல்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கவும் வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், மாணவா்களின் பாதுகாப்புக்காகவும் தமிழகம் முழுவதும் ஏபிவிபி தனது போராட்டத்தைத் தொடரும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.