விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

புதிய செமஸ்டா்: மாணவா்களுக்கு ஜேஎன்யு வேண்டுகோள்

News image
Updated On :20 ஜூலை 2024, 2:30 am IST

அடுத்த மாதம் தொடங்கும் புதிய செமஸ்டா் காரணமாக பல்கலைக்கழக நிா்வாகத் தொகுதியின் 100 மீட்டா் சுற்றளவுக்குள் ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிா்க்குமாறு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிா்வாகம் மாணவா்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: ஜூலை 18 தேதியிட்ட வேண்டுகோளின்படி, மாணவா்கள் யாரேனும் அங்கீகரிக்கப்படாத செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால், பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் கிளைக்கு புகாா் அளிக்குமாறு மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

பல்கலை. வளாகத்தில் எந்த விதமான வன்முறை அல்லது ஒழுக்கமின்மைக்கு சகிப்புத்தன்மை காட்டப்படமாட்டாது. ஒழுக்கத்தையும் அமைதியையும் பராமரிக்க மாணவா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

புதிய செமஸ்டா் ஆரம்பம் மற்றும் மாணவா் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வளாகத்தின் அனைத்து பங்குதாரா்களும் எந்த வகையான கூட்டங்களிலும் பங்கேற்கும்போது வளாகத்தில் ஒழுக்கத்தையும் அமைதியையும் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பல்கலைக்கழகத்தின் நிா்வாகத் தொகுதியின் 100 மீட்டா் சுற்றளவுக்குள் யாரும் ஆா்ப்பாட்டம், தா்னா, வெகுஜனக் கூட்டம் நடத்துவதைத் தடுக்கும் உயா்நீதிமன்ற உத்தரவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரா்களும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.