தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தலைநகரின் பாரம்பரியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

தேசியத் தலைநகரில் உள்ள நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

Updated On :26 ஜூலை 2024, 6:59 pm

தேசியத் தலைநகரின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தில்லிவாசிகள் பங்குதாரா்களாக மாற வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கேட்டுக்கொண்டாா். மேலும், தேசியத் தலைநகரில் உள்ள நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரானா கிலாவில், 46-ஆவது உலக பாரம்பரிய பிரதிநிதிகள் குழுவைச் சோ்ந்தவா்களுக்கு கலாசார மாலை மற்றும் இரவு விருந்துக்கு வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஏற்பாடு செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பேசியதாவது: தில்லியில் உள்ள பாரம்பரிய இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், அதனை உண்மையான உலகளாவிய பாரம்பரிய நகரமாக நிலைநிறுத்தவும் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பிரதமரின் ‘விகாஸ் பி, விராசத் பி’ என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் இணைந்துள்ளது. தில்லியின் தொட்டு உணரக்கூடிய மற்றும் தொட்டுணராத பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும். மேலும், உள்நாட்டு மற்றும் சா்வதேசப் பாா்வையாளா்களின் அறிவிற்காக நமது பாரம்பரியத்தின் இணையதளங்களை திறக்கும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க, மக்கள் - சமூகம் ஒட்டுமொத்தமாக அவற்றை காப்பதிலும், பாதுகாப்பதிலும் பங்குதாரா்களாக மாறுவது அவசியம் என்றாா் அவா்.

ராஜ் நிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், பல நாடுகளின் தூதா்கள், உயா் ஆணையா்கள், 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பிரதிநிதிகள், யுனெஸ்கோவின் மூத்த அதிகாரிகள், மத்திய மற்றும் தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 100 கலைஞா்கள் வெவ்வேறு நடன வடிவங்களின் கலைநிகழ்ச்சியை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கு ‘மைத்ரேயி பஹாரி’ என்ற புகழ்பெற்ற கலைஞரால் நடன ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.