தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரூ. 43 கோடி கோகைன் போதைப்பொருள் கடத்த முயன்ற தாய்லாந்து பெண் கைது

பாத்திரப் பெட்டிகளுக்குள் மறைத்து இந்தியாவுக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண்

News image

கைது

Updated On :27 ஜூலை 2024, 7:24 pm

ரூ.43 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை பாத்திரப் பெட்டிகளுக்குள் மறைத்து இந்தியாவுக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண்ணை தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்ததாக சுங்கத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து சுங்கத் துறையினா் தெரிவித்ததாவது: குற்றம் சாட்டப்பட்டவா் சுமாா் 33 வயதுடையவா். இவா், ஜூலை 23-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த பிறகு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாா். விமானத்தில் வந்த பிறகு அவரது சாமான்கள் பரிசோதனை செய்யப்பட்டது. தனிப்பட்ட சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகாரிகள் அவரது சாமான் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியின் பையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாத்திரங்களில் இருந்து 3.12 கிலோ கிராம் கோகைன் கைப்பற்றினா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ.43.13 கோடியாகும். இதையடுத்து, அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வியாழக்கிழமை மற்றொரு சம்பவத்தில், மத்திய புலனாய்வுத் துறையினா் ஜொ்மனி வாழ் இந்தியரை தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இடைமறித்தனா். அப்போது, அவரிடமிருந்து 6 கிலோ முதல் தர கோகைன் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.