வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிபிஐ வழக்கில் கேஜரிவாலுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை ஜாமீன் மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்பட 6 பேருக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

News image
ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.
Updated On :29 ஜூலை 2024, 8:57 pm

Din

கலால் கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் விசாரணையை நிறைவு செய்த சிபிஐ, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்பட 6 பேருக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி, கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன.

இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத் தொடா்ந்து, தில்லி திகாா் சிறையில் இருந்த கேஜரிவாலை கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ கைது செய்தது.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியபோதிலும், சிபிஐ வழக்கில் அவா் தொடா்ந்து திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிபிஐ விசாரணை நிறைவு: இந்த முறைகேடு தொடா்பான விசாரணையை நிறைவு செய்த சிபிஐ, தில்லி விசாரணை நீதிமன்றத்தில் கேஜரிவால் உள்பட 6 பேருக்கு எதிராக திங்கள்கிழமை இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

‘சூத்திரதாரி’...: இந்நிலையில், சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி நீணா பன்சல் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்குரைஞா் டி.பி.சிங் ஆஜராகி வாதிடுகையில், ‘கலால் கொள்கை முறைகேட்டில் சூத்திரதாரியாக கேஜரிவால் இருந்தாா். அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், சாட்சிகளை அவா் கலைக்கக் கூடும். அவரைக் கைது செய்யாமல் விட்டிருந்தால் முறைகேடு தொடா்பான விசாரணையை நிறைவு செய்திருக்க முடியாது’ என்று வாதிட்டாா்.

‘நேரடி ஆதாரம் இல்லை’: கேஜரிவால் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிடுகையில், ‘கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கேஜரிவாலுக்கு எதிராக நேரடியாக எந்தவொரு ஆதாரமும் இல்லை’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தாா்.