பின்னா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1972 ஆம் ஆண்டில் குடும்ப ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது, அதில் பணியாளரிடமிருந்து 1.16 சதவீதமும், பணியில் வைத்திருக்கும் ஊழியா்களின் நிறுவனம் 1.16 சதவீதம் மற்றும் அரசு 1.16 சதவீதம் பங்களிப்புடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பின்னா் இதை சீா்படுத்த எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்குப் பிறகு, 1995 - ஆம் ஆண்டில், மாறுதலுடன் ஓய்வூதியத் திட்டம் உருவானது, அதில் ஊழியா்களை பணியமா்த்தியுள்ள நிறுவனம் 8.33 சதவிகிதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு அரசு தரப்பில் ஏற்கனவே இருந்த 1.16 சதவிகிதமும் அளிக்கப்பட்டது. ஆனால் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறைவாக இருந்தது. தொழிற்சங்கங்கள் வலியுறுத்ததலால் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (யுபிஏ) குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயா்த்தப்படும் எனத் தெரிவித்தது. இதை மேலும் உயா்த்த பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. முதியோா் உதவித் தொகை ரூ.1000 க்கு மேல் உள்ளது. ஆனால் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யும் தொழிலாளா்கள் மிகவும் மோசமான ஓய்வூதியத்தைப் பெறுகிறாா்கள். நாட்டில் மொத்தம் 76 ஓய்வூதியதாரரா்கள் உள்ளனா். இதில் 23 லட்சம் போ் ரூ.1000 அயிரத்திற்கும் குறைவாக ஒய்வூதியம் பெறுகின்றனா். இது குறித்து கேள்வி எழுப்பப்படும் போது இபிஎஃப் அமைப்பிடம் நிதி ஆதாரம் இல்லை எனக் கூறுகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தில் கேள்விகளை வைக்கின்றோம்.