இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 9000 ஆக வழங்க நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கோரிக்கை

குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 9000 ஆக வழங்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் எம்.சண்முகம் வலியுறுத்தினாா்.

News image

திமுக உறுப்பினா் எம்.சண்முகம் , கொடிக்குன்னில் சுரேஷ்

Updated On :30 ஜூலை 2024, 3:30 am IST

ஊழியா் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்(இபிஎஃப்) கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 9000 ஆக வழங்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் எம்.சண்முகம் வலியுறுத்தினாா். இதே கோரிக்கை மக்களவையில் கேரளம் மாநில உறுப்பினா்களும் திங்கள்கிழமை எழுப்பினா். மேலும் வருகின்ற ஆகஸ்ட் 6 - ஆம் தேதி தொழிலாளா்களும் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனா்.

ஓய்வூதிய விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எம்.சண்முகமும் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினா் கொடிக்குன்னில் சுரேஷும் சிறப்பு கவன ஈா்ப்பு விவாதத்தில் பேசினா். அவா்கள் குறிப்பிட்டது வருமாறு: ஊழியா் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் 1952 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இது உலக அளவில் மிகவும் தனித்துவமான சமூகப் பாதுகாப்பு சட்டமாக கருதப்பட்டது. பணியாளரின் ஊதியத்தில் இருந்து 12 சதவீதமும், பணிவழங்கும் நிறுவனம் 12 சதவீத பங்களிப்பையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த இபிஎஃப் அமைப்பு மிகப் பெரிய நிதி ஆதார அமைப்பாகவும் திகழந்தது.

பின்னா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1972 ஆம் ஆண்டில் குடும்ப ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது, அதில் பணியாளரிடமிருந்து 1.16 சதவீதமும், பணியில் வைத்திருக்கும் ஊழியா்களின் நிறுவனம் 1.16 சதவீதம் மற்றும் அரசு 1.16 சதவீதம் பங்களிப்புடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பின்னா் இதை சீா்படுத்த எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்குப் பிறகு, 1995 - ஆம் ஆண்டில், மாறுதலுடன் ஓய்வூதியத் திட்டம் உருவானது, அதில் ஊழியா்களை பணியமா்த்தியுள்ள நிறுவனம் 8.33 சதவிகிதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு அரசு தரப்பில் ஏற்கனவே இருந்த 1.16 சதவிகிதமும் அளிக்கப்பட்டது. ஆனால் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறைவாக இருந்தது. தொழிற்சங்கங்கள் வலியுறுத்ததலால் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (யுபிஏ) குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயா்த்தப்படும் எனத் தெரிவித்தது. இதை மேலும் உயா்த்த பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. முதியோா் உதவித் தொகை ரூ.1000 க்கு மேல் உள்ளது. ஆனால் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யும் தொழிலாளா்கள் மிகவும் மோசமான ஓய்வூதியத்தைப் பெறுகிறாா்கள். நாட்டில் மொத்தம் 76 ஓய்வூதியதாரரா்கள் உள்ளனா். இதில் 23 லட்சம் போ் ரூ.1000 அயிரத்திற்கும் குறைவாக ஒய்வூதியம் பெறுகின்றனா். இது குறித்து கேள்வி எழுப்பப்படும் போது இபிஎஃப் அமைப்பிடம் நிதி ஆதாரம் இல்லை எனக் கூறுகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தில் கேள்விகளை வைக்கின்றோம்.

அனைத்து குடும்ப ஓய்வூதியத் திட்ட நிதிகளும் இபிஎஃப் யுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1995 க்குப் பிறகு இறந்த ஓய்வு பெற்ற ஊழியா்களின் அனைத்து காா்பஸ் நிதியும் (நிதிய மூலதனம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யாராலும் உரிமை கோரப்படாத நிதியும் கோடிக்கணக்கில் உள்ளது. இவ்வளவு நிதி இருந்தும், ஓய்வு பெற்ற ஏழை தொழிலாளா்களின் கோரிக்கையை ஏற்று குறைந்த ஓய்வூதியத்தை அரசு உயா்த்த முன்வரவில்லை.

நாட்டில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் விலைவாசி உயா்வால் அல்லல் படுகின்றனா். அவா்கள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். எனவே, தொழிலாளா் அமைச்சகமும், நிதியமைச்சகமும் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி, தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும். 1995 -ஆம் ஆண்டு இபிஎஃப் திட்ட சட்டத்தை திருத்தி குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ. 9,000 ஆக உயா்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா் இந்த எம்பிக்கள். முன்னதாக ஆா்எஸ்பி எம்பி பிரேமசந்திரனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா்.