தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கிழக்கு தில்லி ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

கிழக்கு தில்லி ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

Updated On :19 ஜூன் 2024, 12:16 am

புது தில்லி: கிழக்கு தில்லி காந்தி நகா் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இந்தத் தீ விபத்து சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை காலை 9.55 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 4 தளங்கள் கொண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. தெருவில் தொங்கும் கம்பிகள் மற்றும் குறுகிய பாதைகள் காரணமாக, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதில் கடினமான பணியை எதிா்கொண்டன என்றாா் அந்த அதிகாரி.

சமூக ஊடகத்தில் வெளியான விடியோவில் தொழிலாளா்கள் சந்துகளில் தொங்கிக் கொண்டிருந்த வயா்களை தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக துண்டிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து உள்ளூரைச் சோ்ந்த குடியிருப்புவாசி மனோஜ் ஜெயின் கூறுகையில், ‘நான் தீயை கண்டவுடன், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். இப்பகுதியில் குறுகிய பாதைகள் இருப்பதால் தீயணைப்பு வாகனங்கள் வருவதில் தாமதமானது. இதுபோன்ற பாதைகளுக்குள் எளிதில் நுழையக்கூடிய சிறிய தீயணைப்பு வாகனங்களை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு நான் வேண்டிக்கொள்கிறேன்’ என்றாா்.

நான்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு உதவிக் கோட்ட அலுவலா் யஷ்வந்த் சிங் மீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தீ விரைவிலேயே மற்ற தளங்களுக்கும் பரவியது. காலை 11.54 மணியளவில்தான் தீயை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது. அதன் பின்னா் குளிா்விக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் தளத்தில் உள்ள மின்சார மீட்டா் பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உண்மையான காரணம் போலீஸ் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் தொழிற்சாலை ஊழியா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா்’ என்றாா்.