தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
நான்கு மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து தொழிலாளா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து முஜேசா் காவல் நிலைய ஆய்வாளா் பூரன் சிங் கூறுகையில், ‘கிரண் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தொடா்ச்சியான வெடிப்புகள் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தின. தீயானது, அருகிலுள்ள ஒமேகா பிரைட் ஸ்டீல் தொழிற்சாலை மற்றும் என்வோசேஃப் அக்வா சொல்யூஷன்ஸ் ஆகிய இடங்களிலும் பரவியது.
தீ விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே காரணம் தெரியவரும்’என்றாா் அவா்.
தொடர்புடையது

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தென்கொரிய வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் தீ விபத்து
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


