ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 9:35 pm

நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இந்தத் தீ விபத்து குறித்து காலை 9:17 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தீயை அணைப்பதற்கு ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆனது. தீ அருகிலுள்ள பிற ஆலைகளுக்குப் பரவாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.