நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இந்தத் தீ விபத்து குறித்து காலை 9:17 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தீயை அணைப்பதற்கு ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆனது. தீ அருகிலுள்ள பிற ஆலைகளுக்குப் பரவாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் காந்திராஜ் வலியுறுத்தல்

கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து!
நரேலா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தலையணை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



