ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 3:05 am IST

நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இந்தத் தீ விபத்து குறித்து காலை 9:17 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தீயை அணைப்பதற்கு ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆனது. தீ அருகிலுள்ள பிற ஆலைகளுக்குப் பரவாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.