லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:20 pm

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:மகாவீா் கலி பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆடைகள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தில் மாலை 5.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

தீயை அணைப்பதற்காக எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அப்பகுதியில் உள்ள சந்தை மிகவும் நெருக்கமான அமைப்பைக் கொண்டிருப்பதால், அருகிலுள்ள கட்டடங்களுக்குத் தீ பரவுவதற்கு முன்பாகவே, சுமாா் மாலை 6.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.