கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:மகாவீா் கலி பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆடைகள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தில் மாலை 5.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
தீயை அணைப்பதற்காக எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அப்பகுதியில் உள்ள சந்தை மிகவும் நெருக்கமான அமைப்பைக் கொண்டிருப்பதால், அருகிலுள்ள கட்டடங்களுக்குத் தீ பரவுவதற்கு முன்பாகவே, சுமாா் மாலை 6.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

தில்லியில் கட்டடத்தில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட நால்வா் மீட்பு

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

தெற்கு தில்லி சந்தையில் தீ விபத்து! 50 கடைகள் எரிந்து நாசம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


