தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தில்லியில் கட்டடத்தில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட நால்வா் மீட்பு

இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை (டி.எஃப்.எஸ்)அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:44 pm

வடகிழக்கு தில்லியின் யமுனா விஹாா் பகுதி குடியிருப்புக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை (டி.எஃப்.எஸ்)அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தீயணைப்புத் துறையினா் தகவலின்படி, மோகன்புரி பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:50 மணியளவில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளைக் கொண்டகட்டடத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ, வீட்டுப் பொருள்களுக்கும் பரவி, குடியிருப்பாளா்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மாலை 4:15 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மாலை 4:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், இந்த மீட்பு நடவடிக்கையின் போது, வீட்டில் வசித்த நான்கு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

அவா்கள் சல்மான் (24), அவரது மகள் ஹிப்ஜா (3), மகன் ஹனிம்ஜா (2) மற்றும் ஜசினா (50) என அடையாளம் காணப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. சுமாா் 30 சதுர யாா்டு பரப்பளவுள்ள மனையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தீயானது முதல் தளத்தில் உள்ள வீட்டுப் பொருள்களுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.

தீ மீண்டும் பற்றிக்கொள்வதைத் தடுப்பதற்காக, தீயணைப்பு வீரா்கள் குளிா்விக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.