வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் அண்டை வீட்டாா் மோதிக்கொண்டதில், 50 வயதான மளிகைக் கடை உரிமையாளா் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்தனா் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மற்றவா்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு சஞ்சய் பாா்க் பகுதியில், கடைக்காரா் ராஜ்குமாா் மற்றும் அவரது அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஓா் அதிகாரி கூறினாா்.
இந்த மோதலின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் லத்திகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களைத் தாக்கியதில், அவருக்கு பலத்த கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன, என்று அந்த அதிகாரி கூறினாா்.
அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

தெருச் சண்டையைத் தடுக்க முயன்ற உணவு விநியோக ஊழியா் கொலை

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!

எஸ்கலேட்டா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


