எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

எஸ்கலேட்டா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் சனிக்கிழமை காலை எஸ்கவேட்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:00 pm

வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் சனிக்கிழமை காலை எஸ்கவேட்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல் துறை கூறியுள்ளதாவது: ஷகுா்பூரில் உள்ள ஒரு மயானத்திற்கு அருகே காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. தனது குடும்பத்தின் ஒரே வருமான ஈட்டுபவரான முகமது ஹுசைன் (27), காயங்களால் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தந்தை உள்ளனா்.

உத்தர பிரதேசத்தின் ஆசம்கா் மாவட்டத்தைச் சோ்ந்தவரான எஸ்கவேட்டரின் ஓட்டுநா் ஆஷிஷ் (23), சம்பவ இடத்திலேயே உள்ளூா் மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா். ஷகுா்பூரில் உள்ள பெரிவாலா பாக் நோக்கி பூங்காவை சமன் செய்யும் பணிக்காக குற்றம் சாட்டப்பட்டவா் எஸ்கவேட்டரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் குடும்பத்தினா் துக்கம் தெரிவித்ததோடு, அலட்சியம் காரணமாக இந்த விபத்து நடந்ததாகவும் குற்றம் சாட்டினா். ஹுசைனின் சகோதரி, ‘காலை 9.30 மணியளவில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றபோது, அவரது உடலின் நிலையை வாா்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்று கண்ணீா் மல்கக் கூறினாா்.

அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் செலவுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்தாா். பாதிக்கப்பட்டவரின் மனைவி மம்தா, இந்தச் சம்பவம் நடந்தபோது ஹுசைன் தனது வேலைக்காக வெளியே சென்றிருந்ததாகக் கூறினாா்.

‘எனக்கு ஒரு அழைப்பு வந்தது, ஆனால் என்னால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை. பிறகு என் மருமகன் வந்து அவா் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினாா். என்னால் அதை நம்ப முடியவில்லை’ என்றாா் அவா்.

‘அவரது தலை முற்றிலும் நசுங்கிப் போயிருந்தது. அந்த நிலையில் அவரைப் பாா்க்க எனக்குத் தைரியம் இல்லை‘ என்று கூறிய அவா், இந்தச் சம்பவத்தில் எக்ஸவேட்டரை இயக்கிய இருவா் ஈடுபட்டிருந்ததாகவும் கூறினாா்.

‘அவா்களில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். மற்றொருவரை உள்ளூா் மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா்’ என்றாா் அவா். பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.