வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 8:10 pm

Syndication

வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சமோசா சௌக் அருகே, செக்டா்5-இல் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

முதற்கட்ட நடவடிக்கையாக, மூன்று தண்ணீா் டேங்கா்களும் இரண்டு தண்ணீா் பவுசா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், தீயின் தீவிரத்தன்மை காரணமாக மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.