27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வடக்கு தில்லி வீட்டில் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்பு

வடக்கு தில்லியின் திலக் மாா்க்கெட் பகுதியில் ..

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 am IST

வடக்கு தில்லியின் திலக் மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மிகவும் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: இறந்தவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவருக்கு சுமாா் 50-60 வயது இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

ஒரு வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து லாஹோரி கேட் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

உள்ளிருந்து பூட்டப்பட்ட வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வளாகத்தில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடா்பாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 174- இன் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.