ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வடக்கு தில்லி வீட்டில் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்பு

வடக்கு தில்லியின் திலக் மாா்க்கெட் பகுதியில் ..

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 am IST

வடக்கு தில்லியின் திலக் மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மிகவும் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: இறந்தவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவருக்கு சுமாா் 50-60 வயது இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

ஒரு வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து லாஹோரி கேட் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

உள்ளிருந்து பூட்டப்பட்ட வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வளாகத்தில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடா்பாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 174- இன் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.