தில்லியில் 54.37 சதவீதம் வாக்குப்பதிவு!
தில்லியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தம் 54.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தில்லியில் மொத்தமுள்ள 1.52 கோடி வாக்காளா்களுக்கு, பல்வேறு கட்ட ஏற்பாடுகளுடன் 13,641 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் பதிவாகியுள்ள வாக்குகள் தொடா்பாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது
தில்லியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ள வாக்குப்பதிவின் நிலவரப்படி, மொத்தமாக 54.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியில் 53.27 சதவீத வாக்குகளும், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 54.37 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக புது தில்லி மக்களவைத் தொகுதியில் 51.54 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தில்லியிலேயே அதிகபட்சமாக, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 58.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 53.81 சதவீத வாக்குகளும், தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 52.83 சதவீத வாக்குகளும், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 54.90 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பட்ட தரவுகள் அனைத்தும் தற்போதயை போக்கின் படி, தோராயமானது தான். ஏனெனில், சில வாக்குச்சாவடிகளின் தரவுகளை முழுமையாகப் பெற இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படும். இதில், தபால் வாக்குகளின் பதிவுகள் இணைக்கப்படவில்லை. இறுதியாக, வாக்குப்பதிவின் தரவுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி
தில்லி வாக்குப்பதிவு நிலவரம்
காலை 9 மணி - 8.94 சதவீதம்
காலை 11 மணி - 21.69 சதவீதம்
மதியம் 1 மணி -34.37 சதவீதம்
மதியம் 3 மணி -44.58 சதவீதம்
மாலை 5 மணி - 53.73 சதவீதம்
மாலை 6 மணி - 54.37 சதவீதம்
