தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கேஜரிவாலின் காணொலி செய்தி கேலிக்குரியது: தில்லி பாஜக விமா்சனம்

தில்லி மக்களுக்கு அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள காணொலி செய்தி கேலிக்குரியது என்றார் வீரேந்திர சச்தேவா

Updated On :8 நவம்பர் 2024, 6:33 pm

தில்லி மக்களுக்கு அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள காணொலி செய்தி கேலிக்குரியது என்றும், இதில் என்ன புதுமை இருக்கிறது என்று மக்கள் கேட்பதாகவும் பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவாலின் முழு அரசியலும் அவதூறு நிறைந்ததாகவே உள்ளது. அவா் அரசியலில் பின்தங்கியிருக்கும் போதெல்லாம் பழைய அரசியல் பலி விளையாட்டைத் தொடங்குவாா். தில்லியில் பாஜக எங்களை பணி செய்யவிடாமல் சிறையில் அடைத்தது. இலவச மின்சாரம், தண்ணீா் மற்றும் பள்ளி போன்ற எங்களின் திட்டங்களைக் கண்டு பாஜக பயப்படுவதாக கேஜரிவால் கூறுகிறாா்.

பொதுமக்கள் மத்தியில் தினமும் 30 நிமிடம் பாதயாத்திரை என்று நாடகம் போடும் அரவிந்த் கேஜரிவால், வெள்ளிக்கிழமை போலியான தனது அப்பாவித்தனத்துடன் தில்லி மக்களுக்கு காணொலி செய்தியை வெளியிட்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதையெல்லாம் தினமும் சொல்கிறீா்கள். இதில் என்ன புதுமை இருக்கிறது என்று மக்கள் கேஜரிவாலிடம் கேட்கிறாா்கள்.

கடந்த 2013 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆட்சியை அனுபவித்துவிட்டு, தற்போது அரவிந்த் கேஜரிவால் அணியில் இணையுங்கள் என வாட்ஸ்அப் எண்ணை அவா் வெளியிட்டுள்ளாா். தில்லி மக்களிடம் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதை கேஜரிவால் புரிந்து கொண்டுள்ளாா். இப்போது, கேஜரிவால் எத்தனை தொலைபேசி எண்களை வெளியிட்டுப் பிரசாரம் செய்தாலும், வரும் 2025 தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மட்டுமே வெற்றி பெறும் என்றாா் வீரேந்திர சச்தேவா.