பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர் தற்கொலை?

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர் தற்கொலை செய்துகொண்டது பற்றி...

News image
தில்லியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை!- Photo: X / IANS
Updated On :10 நவம்பர் 2025, 7:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி ஜந்தர் - மந்தரில் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர் திங்கள்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தில்லி காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட நபர், தில்லி ஜந்தர் - மந்தர் பகுதியில் காற்று மாசுக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தில்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தற்கொலை செய்துகொண்ட நபரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை, சம்பவ நடந்த இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ”அந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது விசாரணையில் உறுதி செய்யப்படும். சடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

summary

Man commits suicide by shooting himself in Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.