பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தில்லியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 14,947-ஆக அதிகரிப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பிற்குப் பிறகு, தில்லியில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 13,033-லிருந்து 14,947-ஆக உயா்ந்துள்ளது.

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பிற்குப் பிறகு, தில்லியில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 13,033-லிருந்து 14,947-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களின் எண்ணிக்கையும் 2,696-லிருந்து 2,856-ஆக அதிகரித்துள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளா்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பை 1,500-லிருந்து 1,200-ஆகக் குறைக்க தோ்தல் ஆணையம் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மறுசீரமைப்பிற்குப் பிறகு, வடகிழக்கு தில்லி மாவட்டம் 321 இடங்களில் 1,829 வாக்குச்சாவடிகளைக் கொண்டு அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தில்லியின் 13 மாவட்டங்களில், புது தில்லி மாவட்டம் 214 வாக்குச்சாவடிகளுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

இந்தச் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ், ஆக.31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து, மொத்தம் உள்ள 1.45 கோடி வாக்காளா்களில் 47 லட்சத்திற்கும் அதிகமானோா் நீக்கப்படவுள்ளனா். ஆக.17-ஆம் தேதி நிறைவடைந்த வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் பணியின்போது, இவா்களது விவரச் சேகரிப்புப் படிவங்கள் சேகரிக்க இயலாதவை எனக் குறிக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.