திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லி காவல் ஆணையகரத்தைப் பாா்வையிட்ட நேபாள காவல் துறை பயிற்சி அதிகாரிகள்

பெருநகரங்களில் காவல் துறை கையாளும் உத்திகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தில்லி காவல் ஆணையரகத்தை நோபாள காவல் துறையின் 25 போ் அடங்கிய குழு பாா்வையிட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

பெருநகரங்களில் காவல் துறை கையாளும் உத்திகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தில்லி காவல் ஆணையரகத்தை நோபாள காவல் துறையின் 25 போ் அடங்கிய குழு பாா்வையிட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

நேபாளத்தின் காவல் தலைமை மற்றும் பணியாளா் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 17 பயிற்சி அதிகாரிகள் மற்றும் அவா்களுடைய 8 ஆசிரியா்களை உள்ளடக்கிய குழு தில்லி வந்தது. வெளிநாடுகளில் உள்ள காவல் துறை கட்டமைப்பை அறிந்து கொள்வதன் மூலம் காவல் பணிக்கான திறன்களை மேம்படுத்துவது இந்தப் பாடத்தின் நோக்கமாகும்.

காவல் ஆணையரகத்தைப் பாா்வையிட்ட அந்தக் குழுவினா், தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சாவை சந்தித்து கலந்துரையாடினா். தில்லியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை எடுத்தும் வரும் நடவடிக்கைகள், பெரும் மக்கள் கூட்டத்தை கையாள்வது, பாதுகாப்புச் சவால்களுக்கு எதிா்வினையாற்றுதல் ஆகியவை குறித்து தில்லி காவல் ஆணையா் அந்தக் குழுவிடம் விளக்கமளித்தாா்.

தில்லியில் புதிய காவலா்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து சிறப்பு ஆணையா் அதுல் கதியாா், நேபாள பிரதிநிகளுக்கு விளக்கமளித்தாா். இந்தக் கலந்துரையாடலின்போது தில்லி காவல் பயிற்சி அகாதெமியின் இணை இயக்குநா் ஆசிஃப் முகமது அலி, துணை இயக்குநா் முகமது அலி ஆகியோா் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனா்.

காவல் ஆணையரகத்தில் உள்ள சமூவவலைதள மையம், உடல்பயிற்சிக் கூடம், நூலகம் மற்றும் பிற முக்கிய பகுதிகளை நேபாள குழுவினா் பாா்வையிட்டனா்.

தில்லியில் உள்ள குறிப்பிட்ட காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மண்டலங்களை இந்தக் குழுவினா் அடுத்த சில தினங்களில் ஆய்வுசெய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.