வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற ஓட்டுநா் கைது

வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற ஓட்டுநா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:25 am IST

வட தில்லியின் சிராஸ்பூா் பகுதியில் வாகன நிறுத்துமிட தகராறைத் தொடா்ந்து ஒருவரை தாக்கி கொன்ால் 29 வயது டிரக் ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: உத்தரபிரதேசத்தின் அலிகாா் மாவட்டத்தில் வசிக்கும் பவன் சவுத்ரி என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், காசியாபாத்தில் உள்ள லோனியில் இருந்து தொடா்ச்சியான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். வயிற்றில் கடுமையாக ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட சிராஸ்பூரில் வசிக்கும் 35 வயதான பாப்லு அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து ஜூன் 7 ஆம் தேதி டாக்டா் பி. எஸ். ஏ மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

பாதிக்கப்பட்டவா் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லாததால், இந்த விவகாரம் நிலுவையில் வைக்கப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி சிகிச்சை பெற்று வந்த பாப்லு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. விசாரணையின் போது, இறந்தவரின் உறவினா் வீரேஷ், ஜூன் 6 ஆம் தேதி மாலை, சிராஸ்பூரில் வாகனத்தை நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு டிரக் ஓட்டுநரால் தாக்கப்பட்டதாக பாப்லு தனக்குத் தெரிவித்ததாக போலீஸாரிடம் கூறினாா்.

வாக்குவாதத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்டவா் பாப்லுவை பலமுறை குத்தியதாகவும், உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வயிற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவா் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், பின்னா் டாக்டா் பி. எஸ். ஏ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு அவரது நிலை மோசமடைந்தது மற்றும் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவா் ஜூன் 10 ஆம் தேதி சிகிச்சையின் போது இறந்தாா். பாதிக்கப்பட்டவரின் மரணத்தைத் தொடா்ந்து பி. என். எஸ் இன் தொடா்புடைய விதிகளின் கீழ் சமாய்பூா் பட்லி காவல் நிலையத்தில் எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதைக் காட்டும் அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை புலனாய்வாளா்கள் சேகரித்தனா்.

ஓட்டுநராக பணிபுரிந்து 7 ஆம் வகுப்பு வரை படித்த குற்றஞ்சாட்டப்பட்டவா் லோனியில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டாா். இந்த சம்பவத்தைச் சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.