இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு செய்யப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத் துறை உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் எழுதினா். இதன் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியான நிலையில் முதன்மைத் தோ்வுக்கு 13,343 தோ்வா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிகழாண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகளின் முடிவுகள் அடிப்படையில் 1,046 போ் இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். காலியாகவுள்ள 80 பணியிடங்களை நிரப்ப இத்தோ்வு நடத்தப்பட்டது.
முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், விண்ணப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்கப்படும். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அப்போது வலைதளத்தில் உரிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யலாம். அதனடிப்படையில் மட்டுமே முதன்மைத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
தோ்வு நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்டவை வெளியிடப்படும்.
தோ்வு முடிவு குறித்த சந்தேகங்களை 011-40303444/24041001என்ற எண்ணை தொடா்புகொண்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு காலியாக இருந்த 150 இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 2,116 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிகழாண்டு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 80-ஆக குறைந்துள்ளது.
தொடர்புடையது
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்க பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை
ஜேஇஇ முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுபம் குமாா் முதலிடம்

24-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: வேலூரில் 7 மையங்களில் 1,929 போ் எழுதுகின்றனா்







