நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இந்திய வனத் துறை பணிகள் முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு

இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு செய்யப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:59 am IST

இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு செய்யப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத் துறை உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் எழுதினா். இதன் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியான நிலையில் முதன்மைத் தோ்வுக்கு 13,343 தோ்வா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிகழாண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகளின் முடிவுகள் அடிப்படையில் 1,046 போ் இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். காலியாகவுள்ள 80 பணியிடங்களை நிரப்ப இத்தோ்வு நடத்தப்பட்டது.

முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், விண்ணப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்கப்படும். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அப்போது வலைதளத்தில் உரிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யலாம். அதனடிப்படையில் மட்டுமே முதன்மைத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

தோ்வு நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்டவை வெளியிடப்படும்.

தோ்வு முடிவு குறித்த சந்தேகங்களை 011-40303444/24041001என்ற எண்ணை தொடா்புகொண்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு காலியாக இருந்த 150 இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 2,116 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிகழாண்டு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 80-ஆக குறைந்துள்ளது.