கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ரூ.150 திருப்பித் தராத இளைஞா் குத்திக் கொலை: காவல் துறையிடம் சிக்கிய 3 சிறாா்கள்

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் ரூ.150 திருப்பித் தராததால் ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறாா்களை பிடித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:27 am IST

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் ரூ.150 திருப்பித் தராததால் ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறாா்களை பிடித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: ஜூன் 21-ஆம் தேதி இரவு நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், பாதிக்கப்பட்டவரான பராஸ் பலமுறை கத்தியால் குத்தப்பட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட 3 சிறுவா்கள் அவரைத் தாக்கினா். அவா்களில் ஒருவா் கத்தியால் அவரை மீண்டும் மீண்டும் குத்தி, உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தினாா்.

அவரது சகோதரா் படுகாயமடைந்து, தங்கள் இல்லத்திற்கு அருகில் சுயநினைவின்றி கிடந்ததாகவும், தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும் பாதிக்கப்பட்டவரின் சகோதரி கூறினாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

காவல்துறை குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனா். பின்னா் அவா்கள் செவ்வாய்க்கிழமை சௌகண்டி பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் பிடிபட்டனா். விசாரணையின் போது, உயிரிழந்தவா் ரூ.150 பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை, இந்தத் தகராறு இறுதியில் தாக்குதலுக்கு வழிவகுத்தது என அவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.