ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

உஸ்மான்பூரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 26 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:08 am IST

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 26 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இறந்தவா் அருகிலுள்ள பிரம்மபுரியைச் சோ்ந்த லலித் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

காவல்துறையின் கூற்றுப்படி, அதிகாலையில் நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பகத் சிங் காலனியில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினா், அங்கு ஒருவா் தரையில் கிடப்பதைக் கண்டனா். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாா்.

பாதிக்கப்பட்டவருக்கு கத்திக்குத்து காயங்கள் இருந்ததையும், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் காவல்துறை கண்டறிந்தது. குற்றச் சம்பவ இடத்தை ஆய்வு செய்யவும், ஆதாரங்களை சேகரிக்கவும் தடயவியல் குழு வரவழைக்கப்பட்டது.

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 103(1)-இன் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.