பங்கேற்பு அரசியலில் ஈடுபடவே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினேன் என்று மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.
தில்லியில் முன்னாள் ஆளுநரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபோல கிருஷ்ண காந்தி எழுதிய ஐய்க்ண்ஹ ஹய்க் ட்ங்ழ் ச்ன்ற்ன்ழ்ங்ள் எனும் ஆங்கில நூலை சனிக்கிழமை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:
இந்தப் புத்தகம் காந்தியின் மறைவுக்கு பின்பான பல்வேறு விஷயங்களை பேசுகிறது. முக்கியமாக பிரிவினைக்கு பிந்தைய அகதிகள் குறித்து பேசுகிறது. தேச பக்தி என்றால் என்ன? என்பது குறித்து விவாதிக்கிறது. இந்த நூல் ஆங்கிலத்தோடு நின்றுவிடாமல் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்.
உலகத்தில் மய்யமாக இருக்கும் ஒரே கட்சி என்னுடையதுதான். நான் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதே பங்கேற்பு அரசியலுக்காகத்தான். நான் இப்போது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடும் அதுவேதான் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கெளா் இந்த நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா். மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டோஸ், பிரசாா் பாரதியின் முன்னாள் தலைவா் மிரினால் பாண்டே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கருணாநிதியுடன் நான் பணியாற்றியது பெரும் பொக்கிஷம்: முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு!
தேர்தலில் மநீம போட்டியிடவில்லை! - கமல்ஹாசன்

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்: தொண்டா் தொடங்கிய கட்சியை வழிநடத்துகிறாா் சசிகலா
கூடுதல் தொகுதிகள்: கமல் ஆலோசனை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


