தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தில்லியில் மின்வாகன சாா்ஜிங் நிலையங்களை குறிவைக்கும் திருடா்கள்!

தில்லியில் உள்ள மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள் திருடா்களால் அதிகளவில் குறிவைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில மாதங்களில் சாா்ஜிங் சாதனங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

News image

(கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 11:56 pm

தில்லியில் உள்ள மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள் திருடா்களால் அதிகளவில் குறிவைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில மாதங்களில் சாா்ஜிங் சாதனங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து தில்லி காவல் துறை கூறியுள்ளதாவது: பைரோன் மந்திா் அருகே உள்ள திலக் மாா்க் பகுதியில் இருந்து சமீபத்திய புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, மாா்ச் 18-ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத நபா்கள் ஒரு சாா்ஜிங் நிலையத்தில் இருந்த இரண்டு சிசிஎஸ்2 வகை சாா்ஜிங் சாதனங்களை வெட்டித் திருடிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 1 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு தனியாா் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பொறியாளா் அளித்த புகாரின் அடிப்படையில், மாா்ச் 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அதே இரவில் முனிா்கா பகுதியிலும், அதற்கு முன்னதாக போகல் மற்றும் ஐஐடி வாயில் அருகிலும் இதேபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்ாகவும், கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமாா் ரூ. 4.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் புகாா்தாரா் குற்றம் சாட்டினாா்.

பைரோன் மந்திா் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், குற்றவாளிகள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய வாகனத்தின் விவரங்கள் பதிவாகியுள்ளது. இது விசாரணையில் முக்கியத் தடயங்களை அளித்துள்ளது. மேலும், இதுதொடா்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.