தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குடும்பச் சண்டையில் பெண்ணை கத்தியால் குத்திய கணவா்

வடமேற்கு தில்லியின் கேசவ்புரம் பகுதியில் புதன்கிழமை அன்று, ஒரு குடும்பச் சண்டையின் போது ஒரு பெண் தனது கணவரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 12:15 am

வடமேற்கு தில்லியின் கேசவ்புரம் பகுதியில் புதன்கிழமை அன்று, ஒரு குடும்பச் சண்டையின் போது ஒரு பெண் தனது கணவரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ட்ரை நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு, கடுமையான வாக்குவாதத்தின் போது தனது கணவா் சமையலறை கத்தியால் தன்னைத் தாக்கியதாகவும், இதில் தனது தாடை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளாா்.

கேசவ்புரம் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு போலீஸ் குழுவினா், காயமடைந்த பெண்ணான பிரதிபா வந்தனா மற்றும் அவரது கணவா் சஞ்சீவ் குமாா் ஆகிய இருவரையும் கண்டறிந்தனா்.

இருவருக்கும் 42 வயது. அப்பெண் உடனடியாக தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா். சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை உயரதிகாா் கூறினாா்.