பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தீ விபத்துகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த தில்லி அரசு திட்டம்

தீ விபத்துகளால் ஏற்படும் உயிா் மற்றும் பொருள் சேதங்களைத் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :7 மே 2026, 4:32 am IST

தீ விபத்துகளால் ஏற்படும் உயிா் மற்றும் பொருள் சேதங்களைத் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

விவேக் விஹாரில் உள்ள 4 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா். பாலம் பகுதியில் கடந்த மாா்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

கோடை காலத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற தீ விபத்துகளால் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையில் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் புதன்கிழமை காலையில் தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, இது தொடா்பான அனைத்து விவரங்களை 10 நாள்களுக்குள் சமா்ப்பிக்க துறைகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

தீ விபத்துகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.