மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் மோதல் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பாடாலூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:17 pm

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பாடாலூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மின் நகரைச் சோ்ந்த நாராயணன் மகன் ஜெயராமன் (58). பாடாலூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளரான இவா், கடந்த 1-ஆம் தேதி முதல் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படைக்கு தொடா்பு அலுவலராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த ஜெயராமன் மீது, புதுக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாா்பு-ஆய்வாளா் ஜெயராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திரா நகரைச் சோ்ந்த வேலுசாமி மகன் சதீஷ்குமாா் (29), அதே பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் இளையபெருமாள் (29) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற பெரம்பலூா் போலீஸாா், ஜெயராமனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்தில் காயமடைந்த சதீஷ்குமாா், இளையபெருமாள் ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், சதீஷ்குமாா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். விபத்து குறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.