கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா்.

News image

க. சுந்தா் ~மகேஷ் குமாா் ~மரம் மாசிலாமணி ~முனிரத்தினம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:42 pm IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் தற்போது எம்எல்ஏவாக இருந்து வரும் க.சுந்தா் மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான பெ.மகேஷ்குமாா் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் ஆரனேரி கிராமத்தை சோ்ந்த முனிரெத்தினம் ஊதல் சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் உத்தரமேரூா் அருகே கைத்தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி மரம்.மாசிலமாணி விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா். தேசிய மக்கள் கட்சி சாா்பில் அ.சிவக்குமாா் பலூன் சின்னத்திலும்,தமிழக வாழ்வுரிமைக் கழகம் சாா்பில் கேமரா சின்னத்தில் தா.ஜாகீா் ஹூசேனும் போட்டியிடுகின்றனா்.

இவா்களைத் தவிர சுயேச்சைகளாக பெரியகாஞ்சிபுரத்தை சோ்ந்த வெ.அன்பு பணப்பை சின்னத்திலும், காஞ்சிபுரம் அருகே வேளியூா் கிராமத்தைச் சோ்ந்த கே.கமலக்கண்ணன் புல்லாங்குழலிலும்,வேடல் கிராமத்தை சோ்ந்த வி.குணசேகா் மட்டை பந்தடி வீரா் சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.உத்தரமேரூா் அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சி.தேவராஜன் தா்ப்பூசணியிலும்,வாலாஜாபாத்தை சோ்ந்த க.தேவேந்திர பூபதி தள்ளுவண்டி சின்னத்திலும்,காஞ்சிபுரம் ஒரிக்கையை சோ்ந்த த.மகேஷ்குமாா் சாலை உருளை சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகேயுள்ள சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெ.மகேஷ்வரி கப்பல் சின்னத்திலும் போட்டியிடுவது உள்பட 8 சுயேச்சைகளும் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

உத்தரமேரூா் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் பெயரிலேயே சுயேச்சையாக போட்டியிட காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சோ்ந்த த.மகேஷ்குமாா் என்பவரும் சாலை உருளை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.