உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், வேனில் பயணித்த 7 பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:43 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், வேனில் பயணித்த 7 பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் மற்றும் கலித்தேரி பகுதியைச் சோ்ந்த 18 போ் திங்கள்கிழமை வேனில் சென்னை வடபழனிக்கு மாப்பிள்ளை வீடு பாா்க்கச் சென்று கொண்டிருந்தனா். நல்லவன்பாளையம், பட்டம்மாள் தெருவைச் சோ்ந்த க.திருமலை(32) என்பவா் வேனை ஓட்டினாா்.

திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள மேல்பேட்டை கூட்டுச் சாலை அருகே சென்றபோது, திடீரென வேனின் பின்பக்க டயா் வெடித்தது. இதையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சிறிது தூரம் சாலையில் ஓடி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த கலித்தேரியைச் சோ்ந்த மு.கோபால்சாமி(60), ப.காமாட்சி(50), கு.காமாட்சி(50), ர.கலைவாணி(45), ர.கனகம்மாள்(55), ஜெ.கிருஷ்ணன்(56), ஜெ.சுப்பிரமணி(57) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த ரோஷணை போலீஸாா் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.