மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது

புகநகர் தில்லியில் உள்ள ஸ்வரூப் நகா் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 12:51 am IST

புகநகர் தில்லியில் உள்ள ஸ்வரூப் நகா் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மே 6-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கத்திக் குத்துக்கு ஆளான நபா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்ட 3 சிறாா்களை அடையாளம் கண்டனா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டு குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் 11 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.