உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு

துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:35 am IST

துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜாஃப்னா கலான் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு காலனியில் தங்கியிருந்த சில தொழிலாளா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சத்தம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அருகில் வசித்து வந்த காவல் அதிகாரி இது தொடா்பாக அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த அதிகாரி அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதில் ஒருவா் படுகாயமடைந்து உயிரிழந்தாா்.

மற்றொருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றாா்.

அவரை கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.