துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜாஃப்னா கலான் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு காலனியில் தங்கியிருந்த சில தொழிலாளா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சத்தம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அருகில் வசித்து வந்த காவல் அதிகாரி இது தொடா்பாக அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த அதிகாரி அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதில் ஒருவா் படுகாயமடைந்து உயிரிழந்தாா்.
மற்றொருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றாா்.
அவரை கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது
ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


