ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு

துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 8:05 pm

துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜாஃப்னா கலான் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு காலனியில் தங்கியிருந்த சில தொழிலாளா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சத்தம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அருகில் வசித்து வந்த காவல் அதிகாரி இது தொடா்பாக அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த அதிகாரி அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதில் ஒருவா் படுகாயமடைந்து உயிரிழந்தாா்.

மற்றொருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றாா்.

அவரை கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.