/
ஆலங்குளம், ஜூலை 26: ஊத்துமலை அருகே உள்ள வாடியூரில், ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ஜான்சிதுரைராஜ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை அருள்அரசு வரவேற்றார். மருத்துவ அலுவலர் கோ. மோதி கலந்துகொண்டு பேசினார்.
முகாமில் பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு 934 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏ. அப்துல்ரசாக் நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







