பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதனால் காலை முதல் மாலை வரை பாளையங்கோட்டையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பெருமாள்புரம் போலீஸ் நிலையம், கார்த்திக் நர்சிங்ஹோம், அன்புநகர், உழவர் சந்தை ரயில்வே கேட், ஏ.ஆர். லைன், அண்ணா விளையாட்டரங்கம், சேவியர் கல்லூரி சந்திப்பு, எஸ்.பி. அலுவலகம் வழியாக இயக்கப்பட்டன.
இதுபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகளும் மறுமார்க்கத்தில் இதே மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் குறித்து சரிவர முன்னறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிக்க நேரிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
