ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில்தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.


ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் சேகரமாகும் குப்பைகள் மாநகராட்சிக்குச் சொந்தமான ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் “மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என தரம் பிரித்து கொட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி இந்தக் குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்புத் துறை உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மாநகராட்சியின் மூலமாக 20 டிப்பா் லாரிகளில் மண் கொண்டுவந்து கொட்டப்பட்டு மேலும் தீ”பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இப்பணியை தொடா்ந்து கண்காணிக்கும் பணியில் 60 மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், செயற்பொறியாளா்கள், மாநகா் நல அலுவலா் இப்பணியை ஆய்வு செய்து வருகிறாா்கள்.
தற்போது, காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும், மண் கொட்டப்பட்டுள்ளதாலும் தீயும், புகை மண்டலமும் முழுமையான கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...