நெல்லை அருகே நாட்டுத் துப்பாக்கி மீட்பு
திருநெல்வேலி அருகே கண்டியப்பேரி குளக்கரையில் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் மீட்டனா்.


திருநெல்வேலி அருகே கண்டியப்பேரி குளக்கரையில் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் மீட்டனா்.
திருநெல்வேலி அருகே உள்ள கண்டியப்பேரி குளக்கரையில் மா்ம பொட்டலம் கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அதில், 7 எம்எம் நாட்டுத் துப்பாக்கியும், அதனுடன் 9 எம்எம் தோட்டாக்கள் இரண்டும் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த துப்பாக்கியானது மிகவும் துருப்பிடித்த நிலையில், பயன்படுத்த இயலாதவண்ணம் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...