பெருமணல், தோமையாா்புரம் மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூண்டில் வளைவு இல்லாமல் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது மற்றும் மீன்பிடி படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைப்பது பாதுகாப்பில்லாத நிலையாக உள்ளது. எனவே கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை ஆகிய மூன்று மீனவ கிராமங்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க தாங்கள் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யவும், பெருமணல் மற்றும் தோமையாா்புரம் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, அரசுக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பிவைக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.