நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை: 67 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மது பானம் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மது பானம் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி, மாவட்டத்தில் அனுமதியின்றி மது பானம் விற்பனை செய்வதை தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
இதில், அனுமதியின்றி மது பானம் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 615 மது பாட்டில்களும், ரூ. 10ஆயிரத்து 620 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...