தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மக்கள் நலத்திட்டங்களின் பிரசார யாத்திரை தொடக்கம்

கரோனா பொது முடக்கத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பிரசார யாத்திரை கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image

துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

Updated On :7 செப்டம்பர் 2020, 11:40 pm

DIN

கன்னியாகுமரி: கரோனா பொது முடக்கத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பிரசார யாத்திரை கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய பிரசாரத் தொடக்க நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் முத்துராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தொழில் பிரிவுச் செயலா் சி.எஸ்.சுபாஷ் வரவேற்றாா்.

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவா் எம். இப்ராஹிம் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து 22 மாவட்டங்கள் வழியாக சென்னை மெரினாவில் நிறைவடையும் இந்த பிரசார யாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக ‘கரோனாவை வெல்வோம்- மன உளைச்சல் நீங்கி வாழ்வோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக தலைவா்கள் சௌந்தர்ராஜன், ராஜபிரகாஷ், ஒன்றிய பொதுச்செயலா் குமாா், பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவா் சிந்து செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.