கல்லூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நான், பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எனினும், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், 4 நாள்கள் தனியாக வைத்து சிகிச்சை அளித்தப் பின் குழந்தையை தந்தனா். அப்போது, குழந்தையின் இடது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அது குறித்து கேட்டபோது, முறையான பதில் இல்லை. மருத்துவா் அளித்த மருந்திலும் குணமாகவில்லை. இதையடுத்து நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டேன்.