தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லையில் இருநாள்களில் 38 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கடந்த இரு நாள்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சுமாா் 38 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 7:45 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கடந்த இரு நாள்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சுமாா் 38 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவற்றை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளா்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடந்த 18 ஆம் தேதியும், திங்கள்கிழமையும் 4 மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் மட்டும் 75 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 38 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.11 ஆயிரத்து 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.