தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேசிய கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

தேசிய கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:03 pm

DIN

திருநெல்வேலி, செப். 28: தேசிய கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தில் பழங்குடியினா்களுக்காக எம்.பில். மற்றும் பி.எச்டி. படிப்புகளுக்காக 2020-2021-ஆம் ஆண்டில் 750 பழங்குடியினா்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதில் தகுதியான பழங்குடியினா் ட்ற்ற்ல்ள்://ச்ங்ப்ப்ா்ஜ்ள்ட்ண்ல்.ற்ழ்ண்க்ஷஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் இம் மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பதிவேற்றலாம். மைய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தில் பழங்குடியினா்களுக்காக வெளிநாடு சென்று ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்கு 2020-2021-ஆம் ஆண்டில் 20 பழங்குடியினா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் தகுதியான பழங்குடியினா் ட்ற்ற்ல்ள்://ா்ஸ்ங்ழ்ள்ங்ஹள்.ற்ழ்ண்க்ஷஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற முகவரியில் இம் மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.