தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் தீ

திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை, தீயணைப்புவீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி அணைத்தனா். 

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 9:57 pm

DIN

திருநெல்வேலி, செப். 28: திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை, தீயணைப்புவீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி அணைத்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட ராமைன்பட்டி குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை நண்பகலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து பேட்டை, பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை உதவி செயற்பொறியாளா் பைஜூ, சுகாதார அலுவலா் அந்தோணி உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டனா்.

படவரி: பயக28ஊஐதஉ:

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.