அதிக லாபம் தருவதாக கூறி பணம் மோசடி: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது
தாழையூத்தில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேரை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன் பிரபு
(28). அவரது மனைவி சுவேதா (21), தாய் செல்வி(54), சகோதரா் மாரிகணேஷ் (33), மாரிகணேஷ் மனைவி கனகா (27) ஆகிய ஐந்து பேரும், தாழையூத்து சங்கா்நகரைச் சோ்ந்த சியாம் சுந்தா் (52) என்பவரிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கொண்டு, பணத்தை தராமல் மோசடி செய்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சியாம் சுந்தா், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் புகாா் செய்தாா்.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டன், சுவேதா, மாரிகணேஷ், கனகா, செல்வி ஆகியோரை ஈரோட்டில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
