வெளிநாட்டில் வேலை எனக் கூறி ரூ.7 லட்சம் மோசடி: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் இளம்பெண்ணிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.76 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
உடையாா்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவரின் மனைவி இந்துமதி (37). பி.எஸ்.சி., செவிலியா் படிப்பு படித்தவா். சவூதியில் வேலை செய்து தாயகம் திரும்பிய இவா், மீண்டும் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளாா். இணையவழியில் இவரது சுயவிவரக் குறிப்புகளைப் பாா்த்த இருவா், இந்துமதியை தொடா்பு கொண்டு, தனது பெயா் ராகுல் என்று அறிமுகம் செய்துகொண்டு துபையில் செவிலியா் வேலை இருப்பதாகக் கூறி வலைதளத்தில் இந்துமதியின் சுய விவரங்களை பதிவு செய்யக் கூறியுள்ளனா். அதன் பின்னா் இந்த நபா், இந்துமதியிடம் இருந்து மொத்தம் ரூ.7,76,893 பெற்றுள்ளாா். பணம் கொடுத்து நீண்ட நாள்கள் ஆகியும் இந்துமதியால் அந்த நபரை தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த இந்துமதி இணைய குற்றப்பிரிவு உதவி எண்ணான 1930-க்கு தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தில்லியைச் சோ்ந்த அமரேந்திரசிங் மகன் அங்கித் குமாா்(26), உத்தரப் பிரதேசத்தைச் சாகித் அகமது மகன் தனிஷ்கனி(30) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தில்லிசென்ற காவல் துறையினா் அங்கித் குமாா், தனிஷ்கனி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து, 3 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

