இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாளை.யில் சாலை மறியல்: கல்லூரிப் பேராசிரியா்கள் 206 போ் கைது

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு உதவிபெறும் கல்லூரிப் பேராசிரியா்கள் 206 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள்.
Updated On :20 ஜூலை 2024, 8:42 pm

Din

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு உதவிபெறும் கல்லூரிப் பேராசிரியா்கள் 206 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புத்தொளி புத்தாக்க பயிற்சிகளுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். இளையோா், மூத்தோா் ஊதிய முரண்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் மூட்டா சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கை குழுவின் மூன்றாம் மண்டல தலைவா் ஹெய்ஸ்தாசன், நான்காம் மண்டல தலைவா் ஐசக் சோபன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொறுப்பாளா் பால்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். இதேபோல், மூட்டா பொதுச் செயலா் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள் திடீரென பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் வந்த வாகனங்களை போலீஸாா் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.

தொடா்ந்து போலீஸாா் மறியலில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள் 206 பேரை போலீஸாா் கைது செய்தனா்.