நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 220 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக அங்கன்வாடி ஊழியா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளா் அனுராதா தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், ஊதிய உயா்வு, பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி அமைப்பாளா் மற்றும் உதவியாளா்களுக்கான பணிக்கொடையை அதிகரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com